ராணிப்பேட்டை.! விஷம் குடித்து விவசாயி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அருகே கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி துறை(54). இவர் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் இவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக விவசாய நிலத்திற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

அவ்வழியாக சென்றவர்கள் விஷம் குடித்து மயங்கி கிடந்த துறையை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துறையின் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கொண்டபாளையம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer suicide in ranipet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->