அரவக்குறிச்சி அருகே சோகம்... கார் விபத்தில் தந்தை - மகள் உயிரிழப்பு - தாயும், மகனும் மருத்துவமனையில் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்த கார் விபத்தில் தந்தை - மகன் மற்றும் மாமியார் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த தாயும், மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

ஈரோடு சூளை ஜிகேஆர் நகரைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் கிருஷ்ணகுமார், வயது 40. இவர் தனது குடும்பத்துடன் ஈரோட்டில் இருந்து நேற்று முன்தினம் திருச்செந்தூருக்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்செந்தூரில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, அதே காரில் திருச்செந்தூரில் இருந்து ஈரோட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டிக் கோட்டை அருகே இன்று அதிகாலை 3.30 மணியளவில் கார் வந்து கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. 

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கிருஷ்ணகுமார்(40), அவரது மகள் வருணா (10), மாமியார் இந்திராணி (67) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காரில் இருந்த கிருஷ்ணகுமாரின் மனைவி மோகனா (40), அவரது மகன் சுதர்சன் (15) ஆகியோர் படுகாயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். இதனிடையே ஓட்டுநர் இருக்கையில் இருந்த கிருஷ்ணகுமாரின் உடல் காரில் நன்றாக சிக்கிக் கொண்டதால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் உதவியுடன் 1 மணி நேரம் போராடி அவரது உடல் மீட்கப் பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father And Daughter Died In Car Accident Near Aravakurichi Mother And Son Injured


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->