பொதுத்தேர்வு முடிந்து மயமான மாணவிகள் - சமயபுரத்தில் மீட்பு.!
fiver school students found in samayapuram temple
தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிவிட்டு மாணவிகள் வெளியே வந்தனர். இதில் 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை.
ஆனால் 8 மணிக்கு மேலாகியும் மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கு மதியம் தேர்வு முடிந்ததும் அனைத்து மாணவிகளும் புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதனால், பதற்றமடைந்த 5 மாணவிகளின் பெற்றோரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவிகள் 5 பேரும் மதியம் 1.20 மணிக்கே வெளியேறியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் பள்ளிக்கூடத்தில் இருந்து புறப்பட்ட மாணவிகள் எந்த வழியாக சென்றனர்? அவர்களுடன் வேறு யாரும் உடனிருந்தனரா? மாணவிகளிடம் செல்போன் உள்ளதா? கடைசியாக அவர்களது செல்போனில் இருந்து யாருக்கு பேசப்பட்டது? போன்ற விவரங்களையும் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், மாயமான 5 மாணவிகளும் இன்று மீட்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தேர்வு எழுதிவிட்டு மாணவிகள் 5 பேரும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று சாமி தரிசனம் செய்ய பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் சென்றது தெரிய வந்துள்ளது.
பின்னர், மாணவிகள் 5 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fiver school students found in samayapuram temple