அதிகாலையில் சோகம் - பக்தர்கள் பேருந்து மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மீது, சென்னை நோக்கி காய்கறிகளை ஏற்றி வந்த லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து உயிரிழந்தவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four peoples died for accident in ranipetai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->