சேலம் : சாலை விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் பலியான சோகம் ! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ளது பூவனூர். இந்த பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் அவரது மனைவி வேதவள்ளியுடன் தனது உறவினரின் திமணத்திற்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பி சென்றுள்ளார். 

அப்போது சுக்கம்பட்டி அருகே சென்றபோது, இவரது இரு சக்கர வாகனத்திற்கு முன்பு ஒரு லாரி சென்றுள்ளது. முன்னால் வேகத்தடை இருந்ததால் லாரி ஓட்டுநர் லாரியின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் லாரியின் மீது மோதியுள்ளது.

இதனிடையே ஆச்சாங்குட்டப் பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இந்த இரண்டு இரு சக்கர வாகனங்களின் மீதும் மோதியுள்ளது. நொடியில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஒரு 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதில் படுகாயமடைந்த வேதவள்ளியின் கணவர் லட்சுமணன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மேலும் பேருந்தில் வந்த பயணிகளில் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களோடு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four Peoples Died In accident Including 3 Years Old in Salem


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->