காவல்துறை அதிர்ச்சி! கடலூர் முழுவதும் கஞ்சா சப்ளை! சிக்கிய முக்கிய புள்ளிகள்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா சப்ளை செய்த ஒடிசா வாலிபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் போதைப் பொருள்களின் எண்ணிக்கையும் போதை பொருட்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதை ஆகி உள்ளது.

இந்தநிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் விருத்தாசலத்தில் கஞ்சா சப்ளை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விருதாச்சலம் பேருந்து நிலைய பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சோணு மகாராணா, திருப்பூரை சேர்ந்த சதீஷ் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் ஓடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கடலூர் மாவட்டம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா, விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த சதாம் ஆகியோரை தனிப் படை மற்றும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four persons including Odisha youth arrested for supplying ganja across Cuddalore district


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->