முழுமையான போனஸ்! கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal



கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தீபாவளிக்கு குறைந்த அளவிலேயே நிறுவனங்கள் போனஸ் வழங்கி இருப்பதாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், தீபாவளிக்கு முழுமையான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமலேயே தன்னிச்சையாக குறைந்த அளவிலேயே நிறுவனங்கள் போனஸ் வழங்கி இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.

இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு முழுமையான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Frontline Workers Protest Coimbatore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->