பரோட்டா கேட்டு தகராறு - மதுரையில் சப்ளையருக்கு அரிவாள் வெட்டு.!!
gang attack to supplier in madurai
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் பல ஆண்டுகளாக சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இந்த உணவகத்திற்கு நேற்று வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பரோட்டா வேண்டும் என்றுக் கேட்டுள்ளனர்.
அப்போது சப்ளையர் கணபதி, பரோட்டா தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அந்த கும்பல், பரோட்டா உடனடியாக வேண்டும் என்றுக் கணபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்தக் கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கணபதியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதனால், பலத்த காயமடைந்த சப்ளையர் கணபதியை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
gang attack to supplier in madurai