#தமிழகம் || கஞ்சா சப்லை செய்த தமிழக போலீஸ்., மாட்டிக்கொண்டதால்., போட்டுக்கொடுத்த கஞ்சா குடிக்கிகள்.! - Seithipunal
Seithipunal


கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட, ஆயுதபடைக் காவலர் கணேஷ் குமார், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்த கணேஷ்குமார், இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து வந்த தனிப்படை போலீசார், கோவையில் ஆயுதப்படை காவலர் கணேஷ் குமாரை அதிரடியாக கைது செய்தனர். 

இதனையடுத்து, காவலர் கணேஷ்குமாரை, கோயமுத்தூர் காவல் ஆணையர் பிரதீப்குமார்  பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ganja case police ganesh kumar arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->