தமிழகம்: 10 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு! ஐடி ஊழியர் வெறிச்செயல்! வெளியான பின்னணி! - Seithipunal
Seithipunal


திருச்செங்கோடு அருகே தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கத்தியால் வெட்டிய ஐடி ஊழியர், தடுக்க வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த தங்கராசு, முத்துவேலுக்கும் அரிவாள் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள சக்திநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். ஐடி ஊழியரான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று செந்தில்குமார் வீட்டில் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவற்றின் 10 வயது பெண் குழந்தை கஷ்மிதாவை திடீரென கத்தியால் வெட்டியுள்ளார் செந்தில்குமார்.

சிறுமி சுஷ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த தங்கராசு, முத்துவேலு ஆகியோர், செந்தில் குமாரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரையும் செந்தில்குமார் கத்தியால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தங்கராசு, முத்துவேல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல ஆண்டுகளாக செந்தில் குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், யாருடனும் பேசமாட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl attacked in Namakkal police investigation 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->