சேலம் || சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து - திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி அருகே சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை திடீயென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. 

பின்னர் சிறிது நேரத்திலேயே தீப்பற்றி எரியத்தொடங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்து குதித்து உயிர்தப்பினர். இந்த விபத்தில் உயிர் சேதம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும், பயணிகள் சிலருக்கு காயம் ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்களை வரவழைத்து தீயை முழுவதுமாக அணைத்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government bus fire accident in salem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->