பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்-தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது பிளாஸ்டிக் தடையை எதிர்த்து மறுஆய்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. இதற்கிடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக ரூபாய் 36 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிளாஸ்டிக் உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government seals shops if they use plastic products TN govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->