தமிழக அரசுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து வந்த பாராட்டு! - Seithipunal
Seithipunal


இன்றுமுதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நாளை மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு தரப்பில் அணைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நாளை ஒருநாள் விடுமுறை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், தமிழக அரசு முன்னெடுத்துள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று அவர் தெரிவித்தாவது, "தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கேற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor RNRavi tn government rain prevention


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->