மொழி அரசியலை செய்து கொண்டிருக்காமல் தாய் மொழியை வேகமாக கற்றுக்கொள்ள வேண்டும் - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.!
Governor Tamilisai Soundararajan say about language politics
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளதாவது,
"நாம் அனைவரும் தற்போது மரபுகளை மீட்டெடுக்கும் சூழலில் உள்ளோம். மொழியை கொண்டாடுவதில் தமிழர்கள் பெருமை வாய்ந்தவர்கள். மொழி அரசியலை செய்து கொண்டிருக்காமல் தாய் மொழியை வேகமாக கற்றுக்கொள்ள வேண்டும்.
என்னை விமர்சிக்கும் பாதி பேருக்கு தமிழில் பெயரில்லை. அவர்களால் தமிழில் பேச முடியாது, தமிழை பிழை இன்றி எழுத முடியாது.
ஆனால் எனக்கு தமிழ் உயிர், புதிய கல்வி கொள்கை என்பது இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது, அது ஆங்கிலமாகவோ அல்லது மற்ற மொழியாகவோ இருக்கலாம்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Governor Tamilisai Soundararajan say about language politics