#Breaking: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த முடிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதேபோன்று போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய பலனை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

அதேபோன்று ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளில் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் தற்பொழுது ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள் நாளை முதல் வரும் பிப்.26ம் தேதி வரை தமிழக முழுவதும் போராட்டத்திற்கு தயாராகும் வகையில் ஆயத்த கூட்டங்களை நடத்த உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தமிழக முழுவதும் உள்ள மாவட்ட தலைமை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் தமிழக முழுவதும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt doctors have decided to protest across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->