4 நாளில் திருமணம் - மணப்பெண்ணை பிடிக்காததால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே சாத்தன்கோடு பகுதியை சேர்ந்த ராஜு மகன் ராஜேஷ். பெயிண்டரான இவருக்கும் கேரள மாநிலம் பரிசுவைக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்து நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. 

அதன் படி இவர்களுக்கு வருகிற 9-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்ததையடுத்து இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இந்த நிலையில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஒல்லியாக இருப்பதாகவும், அவரை பிடிக்கவில்லை என்று கூறியும் ராஜேஷ் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். 

இதைத் தொடர்ந்து ராஜேஷ் நேற்று மாலை தனது வீட்டின் பக்கத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்று அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நான்கு நாளில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண்ணை பிடிக்காததால் பெயிண்டர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

groom sucide in kanniyakumari


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->