பாஜகவைச் சேர்ந்த பிரபல ரவுடி குணா மீது குண்டர் சட்டம் - காவல்துறை அதிரடி.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பெரும்புதூர் அருகே மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரௌடி படப்பை குணா என்ற என். குணசேகரன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் துணையுடன் அதிமுக பிரமுகராகவும் தொழில் நிறுவனங்களை மிரட்டி தொழிலதிபராகவும் இருந்து வந்தார். 

இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 48 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். இதையறிந்த அவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

அதன் பின்னர் படப்பை குணா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே குணா கடந்த 2023-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக பொறுப்பு வழங்கபட்டது.

இந்த நிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை குணா மிரட்டியதோடு, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், குணா மீது சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனால், தற்போது மீண்டும் பாஜகவை சேர்ந்த ரவுடி குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

guntas file on popular rowdy guna


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->