கோயில்களில் பயன்படுத்தப்படாத தங்கம் எங்கே போகுது? சட்டப்பேரவையில் அமைச்சர் கொடுத்த விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோயில்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருள்கள் குறித்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு முக்கிய அறிவிப்பு வெளியிட்டார்.

அவரது கூற்றுப்படி, பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கப் பொருள்கள் சில, கோயில்களில் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகும். இவை தேவையற்ற சுமையாக கிடப்பில் இருக்கும் சூழலில், அவற்றை மும்பையில் உள்ள அரசு நாணயக் கூடத்தில் உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றப்படுகின்றன.

பின்னர், இந்தியன் வங்கி போன்ற பாரம்பரிய வங்கிகளில் ‘தங்க முதலீட்டு திட்டத்தின்’ கீழ் வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது. இதனூடாக ஆண்டுக்கு ரூ.17.81 கோடி வட்டி கிடைக்கிறது. இந்த வருமானம் நேரடியாக சம்பந்தப்பட்ட கோயில்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது.

இதை போன்று, கோயில்களில் கிடைக்கும் பழைய வெள்ளிப் பொருள்களையும் உருக்கி கட்டிகளாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்களின் கண்காணிப்பு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான மூன்று குழுக்களால் கவனிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hindu Temple DMK Minister TN Assembly


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->