ஆரணி : வீட்டில் கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண்.. 100 லிட்டர் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ஆரணி அருகே பெண் ஒருவர் வீட்டில் கேஸ் அடுப்பில் 100 லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு கள்ளச்சாராய வேட்டை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயம் காய்ச்சும் வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் வருகிறது.

இந்த நிலையில் ஆரணி அருகே வடுகசாத்து என்ற கிராமத்தில் வீட்டில் கேஸ் அடுப்பு வைத்து கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வீட்டில் 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Homemade kallasarayam in Aarani


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->