ஓசூர் அருகே பெரும் சோகம்! 2 பெண் குழந்தைகள் துடிதுடித்து பலி! - Seithipunal
Seithipunal


ஓசூர் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோழிப் பண்ணையில் கோழிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து 2 பெண் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கோழிப்பண்ணையில் விளையாடி கொண்டிருந்த போது, தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது ஜகாவத் என்பவரின் 4, 3 வயதுடைய பெண் குழந்தைகள் சார்பானு, ஆயத்காத்தூன் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hosur Bihar girl babies death in accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->