அண்ணாமலை எப்படி பேசினாலும்... ஒரு ஓட்டு கூட விழாது - ஜெயக்குமார் கடும் தாக்கு.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பக்குவப்படுத்தாத அரசியல்வாதி. இவரது கருத்து தமிழ்நாடு மக்கள் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது. 

ஜெயலலிதா தன்னுடைய ஆட்சி காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அத்தனை பேருக்கும் மத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய அளவிற்கு ஒரு நல்ல சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர். 

ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில் ஒரு இழிவான செயலை அண்ணாமலை செய்கிறார். இவர் அரசியல்வாதி அல்ல. அரசியல் வியாதி அல்ல. அரசியல் வியாபாரி. 

அவரின் விவாதம் நடத்துவது அதிமுகவை பற்றி பேசி எங்களிடம் வாங்கி கட்டிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை இதுபோல பேசுகிறார். ஆளுநராக இருந்த தமிழிசை தவறான கருத்துக்களை தெரிவிக்கலாமா. 

தமிழ்நாட்டில் பா.ஜ.கவை ஒரு பெரிய கட்சியாக கருதவில்லை. பாஜகவை சிறுவயது குழந்தையாக பார்க்கிறோம். அண்ணாமலை எப்படி பேசினாலும் பாஜகவிற்கு ஓட்டு விழாது.

ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு போன்ற பொருட்கள் கிடையாது. அதனை அடுத்த மாதம் வாங்க தெரிவித்துள்ளனர். அதுவரை மக்கள் வயிற்றில் துணியை கட்டிக் கொண்டு இருப்பார்களா என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar says Annamalai talks lose votes


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->