கள்ளச்சாராய விற்பனை! கையும் களவுமாக சிக்கிய அ.தி.மு.க நிர்வாகி.!  - Seithipunal
Seithipunal


கள்ளச்சாராய விற்பனை செய்ததாக அ.தி.மு.க நிர்வாகி சுரேஷ் என்ற சுரேஷ்குமார் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம், ஆத்தூர் அருகே உள்ள கள்ள நத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அவர் பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அ.தி.மு.க விவசாய அணியின் ஆத்தூர் கிழக்கு மண்டல செயலாளராக பொறுப்பு வகித்தவர் தற்போது அ.தி.மு.க உறுப்பினராக உள்ளார். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணப்பாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சுரேஷ் சமீப காலமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கள்ளச்சாராய சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை கைது செய்துள்ளனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallachchrayam sales ADMK executive arrested


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->