கள்ளக்குறிச்சியில் தொடரும் மரண ஓலம்.. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு..! - Seithipunal
Seithipunal



கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதையடுத்து இன்று காலை நிலவரப் படி பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் வாங்கி குடித்ததில் அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு என்று தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப் பட்டது. இதையடுத்து ஜூன் 19ம் தேதி காலை முதல் குடும்பத்தினர் அவர்களை கல்லுக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் அதிகளவில் மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியது தான் உடல்நலம் பாதிக்கப்பட காரணம் என்று தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து பலரும் மேல் சிகிச்சைக்காக சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த சம்பவத்தில் நேற்று இரவு வரை 55 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று அதிகாலை மேலும் 2 பேர் பலியானதில் பலி எண்ணிக்கை தற்போது 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பலரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். 

இந்நிலையில் சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் தொடர்ந்து 159 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 17 பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Hooch Tragedy Death Toll Rises to 57


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->