கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி எண் கொடுத்த ஹோட்டல் உரிமையாளர் கைது..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்ற ஊரில் கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளச் சாராயம் அருந்தியதில் பலர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகினர். இதையடுத்து ஜூன் 19 ம் தேதி காலை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

இதையடுத்து ஜூன் 19ம் தேதி இருந்து இன்று ஜூன் 23ம் தேதி வரை 57 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 159 பேர் வரை சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த கள்ளச் சாராய சம்பவத்தில் பலர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், தற்போது அதிர்ச்சியூட்டும் ஒரு புதிய தகவல் விசாரணையில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த சம்பவத்தில் கைதான மாதேஷ் உயிரிழப்புக்கு காரணமான மெத்தனாலை வாங்க ஒரு ஹோட்டல் உரிமையாளரின் ஜிஎஸ்டி எண்ணை உபயோகப் படுத்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கமிஷனுக்கு ஆசைப்பட்டு மெத்தனால் வாங்க தனது கடையின் ஜிஎஸ்டி எண்ணை ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல் கைதான மாதேஷிடம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஹோட்டல்  சிசிடிவி காட்சியில் மாதேஷ் வந்து செல்வதும், ஹோட்டலில் இருந்து மெத்தனால் எடுத்து செல்லும் காட்சியும்  பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் சக்திவேலை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Hooch Tragedy Hotel Owner Arrested


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->