கள்ளக்குறிச்சி சம்பவம் : சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் 21 பேர் மரணம்..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் சேலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (ஜூன் 26) புதன் கிழமை காலையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சேலம் மருத்துவமனையில் மட்டும் இந்த சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் மாதவசேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் 18ம் தேதி இரவு கள்ளச் சாராயம் அருந்தியதில் பலரது உடல்நலம் பாதிக்கப் பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஜூன் 19ம் தேதி காலை அனுமதிக்கப் பட்டனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக பலரும் விழுப்புரம், கடலூர் அரசு மருத்துவமனைகளுக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப் பட்டனர். அந்த வகையில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 49 பேருக்கும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர்களில் ஜூன் 25ம் தேதி வரை 20 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதுள்ளனர். இந்நிலையில் புதன் கிழமையான இன்று (ஜூன் 26) காலை கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த  ரஞ்சித் என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அவரது வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு 21 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurirchi Hooch Case In Salem GH 21 Peoples Died


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->