செம்மண் கடத்துவதாக ரகசிய தகவல்: பா.ஜ.க. பிரமுகர் உட்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி, நாகர்கோவில் பா.ஜ.க பிரமுகர் உட்பட 4 பேர் களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை பகுதியில் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் போலீசார் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் செம்மண் கடத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். 

ஆனால் அதற்குள் செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதனால் போலீசார் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ, ஹிட்டாச்சி எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

மேலும் செம்மண் கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ.க ஒன்றிய தலைவர் விஜயகுமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari semman smuggled case against BJP celebrities


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->