காரைக்கால் சிறுவன் கொலை விவகாரம் : 13 வயசு சிறுவனை கொன்ற 17வயசு சிறுவன்..தாய் மற்றும் தங்கை பகீர் தகவல்!! - Seithipunal
Seithipunal


காரைக்காலில் 13 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 10 இடங்களுக்கு மேல் கத்தி குத்து காயங்களுடன் வீட்டின் அருகே சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கையிடம் தவறாக நடக்க முயன்றதை தட்டிக் கேட்டதால் சிறுவன் கொலை செய்யப்பட்டதாக உயிர் இழந்த சிறுவனின் தாய் மற்றும் தங்கை பகீர் தகவல்.

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் ஓயட் ஹவுஸ் காலனி பகுதியில் சேர்ந்தவர் சந்தோஷ் (13). இவர் நேற்று மாலை நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது காணாமல் போனதாக கூறப்படுகிறது. சிறுவனை பெற்றோர்கள் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே உடம்பில் பல காயங்களுடன் சிறுவன் சடலமாக கிடந்ததை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக, நிரவி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் குடும்பத்தாருடன் இரவோடு இரவாக காணாமல் போகிறது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், உயிர் இருந்த சிறுவனின் தாய் மட்டும் தங்கை பகீர் தகவலை தெரிவித்துள்ளனர்.

சிறுவன் கொலைக்கான காரணம், தங்கையிடம் தவறாக நடக்க முயன்றதை தட்டி கேட்டதால் 13 வயது சிறுவனை தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற 17 சிறுவன் 10 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக உயிர் இழந்த சிறுவனின் தங்கை மற்றும் தாய் தகவலை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karaikal 13 year boy murder case new data


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->