14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! போக்சோவில் கராத்தே மாஸ்டர் கைது.!
Karate master arrested for raping 14 year old girl in Chennai
சென்னையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கராத்தே மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய மகளைக் காணவில்லை என்று ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புத்தாண்டு அன்று தாய் புகார் கொடுத்தார். ஆனால் மறுநாள் சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் குழந்தைகள் காப்பக உரிமையாளர்கள் சிறுமியிடம் இதுகுறித்து விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கடந்த ஆறு மாதங்களாக சிறுமி முகப்பேர் புகழேந்தி சாலையில் கராத்தே மாஸ்டர் கருணாநிதி(43) என்பவரிடம் பயிற்சி எடுத்து வந்ததும், அவர் சிறுமியிடம் திருமண வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் ஒருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கராத்தே மாஸ்டர் கருணாநிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Karate master arrested for raping 14 year old girl in Chennai