அது ரயில் விபத்து அல்ல... திட்டமிட்ட சதி... 4 முறை நடந்த சம்பவம்! பெரும் அதிர்ச்சியான விசாரணை தகவல்! - Seithipunal
Seithipunal


கவரைப்பேட்டை ரயில் விபத்தில் புதிய அதிர்ச்சி திருப்பம் ஒன்று தற்போது நடந்துள்ளது.

தண்டவாளத்தில் உள்ள போல்டுகள் கழட்டப்பட்டுள்ளதாக NIA  அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி, செப்டம்பர் மாதம் 16 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இதேபோன்று தண்டவாளத்தில் உள்ள போல்டுகள் கட்டப்பட்டுள்ளதாக NIA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் இந்த ரயில் விபத்து சதி திட்டம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை விரிவடைந்துள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.. 

இந்த ரயில் விபத்து நடந்ததற்கு முக்கியமான காரணமாக கூறப்படும் இன்டர்லாக்கிங் பகுதியில் உள்ள முக்கியமான போல்ட்டுகள் கழட்டப்பட்டுள்ளதாக தற்போது NIA அதிகாரிகளின் விசாரணைகள் தெரிய வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதில் பெரும் அதிர்ச்சி அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இன்டர்லாக்கிங் செய்யக்கூடிய அந்த பகுதியில் வேண்டுமென்றே நேராக செல்ல வேண்டிய ரயிலை, லூப் பாதைக்கு திருப்பி விடும் வகையில், பெரிய சுத்தியலால் இன்டர்லாக்கின் பகுதியை தாக்கியதற்கு உண்டான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக NIA அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே இது ரயில் விபத்து இல்லை, இது ரயில் ரயிலை திட்டமிட்டு கவிழ்க்க கூடிய சதி செயல் என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavaraipettai train accident shocking info


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->