7 லட்சம் பேர்., கொடைக்கானலில் குவியும் சுற்றலா பயணிகள்.! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் கடந்த நான்கு நாட்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

இதனால் தங்கும் விடுதிகள் முழுமையாக நிரம்பி இருந்தது என்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலைப்பகுதியில் வலம் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்றும் சுற்றுலா துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக கோடை காலங்களில் ஒரு மாதத்தில் சுமார் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் ஆனால் கடந்த நான்கு நாட்களில் இரண்டு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.

சுற்றுலா தலங்களில் உள்ள சிறு வியாபாரிகள் சுற்றுலா பயணிகளின் வருகையால் தங்கள் வியாபாரம் அதிகரித்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலில் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினரும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை செய்துதர நகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து கொள்வது அவசியமானது.

இதனால் சுற்றுலா பயணிகள் முழுமையாக கண்டு ரசித்து சிரமமின்றி ஊர் திரும்ப பயனுள்ளதாக இருக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodaikanal summer 2022


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->