கிருஷ்ணகிரி | கல்லூரி மாணவி தற்கொலை: பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே உள்ள மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தருமன். இவரது மகள் லோகேஸ்வரி (வயது 19). 

இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. 

இதனால் லோகேஸ்வரியை அவரது பெற்றோர்கள் திட்டியதால் மன உளைச்சல் அடைந்த லோகேஸ்வரி நேற்று இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு அவரது அறையில் தூங்கியுள்ளார். 

இந்நிலையில் இன்று காலை லோகேஸ்வரி நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பார்த்தபோது லோகேஸ்வரி இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகேஸ்வரியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறைந்த மதிப்பெண் பெற்றதாக பெற்றோர் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri college student commits suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->