வெள்ளப்பெருக்கு எதிரொலி... குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி போன்ற அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதற்கிடையே கடந்த சில நாட்களாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதித்தனர். 

இந்நிலையில் இன்றும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kurdala waterfalls tourists bathing ban


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->