சுற்றுலா பயணிகளே ரெடியா..குற்றால அருவியில் குளிக்க அனுமதி!! - Seithipunal
Seithipunal


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தடையை நீக்கி சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

 மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் கேரளாவிலும் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவியில் சமீபத்தில் வெள்ளபேருக்கு ஏற்பட்டது. அதில் அஸ்வின் என்ற 17வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி பரிதாமாக உயிர் இழந்தார்.

 கோடை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் குளிர்ச்சியான பகுதிகளுக்கும் அருவிகளுக்கும் சென்று கோடை விடுமுறையை கழிப்பது வழக்கம். ஆனால் சமீப நாட்களாக கோடையில் கன மழை பெய்து வருகிறது. சமீபத்தில் குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அருவில் தண்ணீர் மலைபோல் கொட்டு கிறது.

 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அதிக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலா தளங்கள் காலியாக காட்சியளிக்கிறது.

ரிமல் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 இந்த நிலையில், மழை குறைந்துள்ளதாலும் அருவியின் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகன் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kutralam Waterfalls tourist bathing allowed


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->