நா.த. க நிர்வாகி கொலை வழக்கில் கைதானவர்களுக்கு காலில் எலும்பு முறிவு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின், மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், கடந்த 16-ந்தேதி காலை, சொக்கிக்குளம் பகுதியில் நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பென்னி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த கோகுல கண்ணன், வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பரத் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், குடும்பப் பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலையில் முக்கிய குற்றவாளியான பாலசுப்பிரமணியனின் உறவினர் மகாலிங்கம், மகன் அழகு விஜய் மற்றும் தாய் நாகலட்சுமி உள்ளிட்டோரை தீவிரமாகத் தேடி வந்தனர். 

இதற்கிடையே, போலீசார் கைதுசெய்யப்பட்ட பென்னி, கோகுலகண்ணன், பரத் ஆகியோரிடம் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரிப்பதற்காக, அவர்களை அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மூன்று பேரும், வைகை ஆற்றுப்பகுதியில் தப்ப முயன்றுள்ளனர். இதில் 3 பேரின் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களை மீட்ட போலீசார், 3 பேரையும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leg bone fracture to ntk secretary murder case accuest


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->