காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பள்ளி சிறுமி காதலனுடன் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


பெற்றோர் காதலுக்கு சம்மதிக்காததால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், காடை இடையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தனர். இவர்களது காதலை அறிந்த அவரது பெற்றோர் இருவரையும் கண்டித்து வந்துள்ளனர்,

இந்நிலையில், அருணின் சகோதரியின் திருமணத்திற்கு அந்த சிறுமி சென்று வந்துள்ளார்.இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். திடீரென அந்த மாணவியை காணவில்லை என கூறப்படுகிறது. சிறுமியை தேடிய போது அங்குள்ள புளிய மரத்தில் அருணும் அந்த சிறுமியின் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lovers committed suicide in Puthukottai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->