மக்களே உஷார்.. கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் பலி.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மதுரையில் பெய்த கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிகழ்விடத்திலேயே பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai youth died in roof collapse due to heavy rain


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->