போடி அருகே கள்ளசாராயத்துடன் கேரளாவுக்கு சென்ற நபர் கைது.!
man arrested for alcohol sales in podi
தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள முந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்குள்ள சோதனை சாவடியில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு வேனை நிறுத்தி ஆய்வு செய்தனர். அந்த வேனில் தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பாட்டில்களில் கள்ளச்சாராயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் நெடுங்கண்டம் அருகே பத்துவலவு பகுதியை சேர்ந்த சுகேரியா குரியன் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திரகுமார் என்பவரிடம் இருந்து சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை வாங்கி கடந்த பல ஆண்டுகளாக சாராயம் காய்ச்சி அதனை கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for alcohol sales in podi