தர்மபுரி || காதலியுடன் ஏற்பட்ட தகராறு, இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
Man Committed Suicide in Dharmapuri
தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அப்பாவு நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man Committed Suicide in Dharmapuri