விருதுநகர் || காட்டு விலங்குகளுக்கு வைத்த பொறி - மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.!
man died for electric shock attack in viruthunagar
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் யானை, புலி, மிலா மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.
இந்தப் பகுதியை ஒட்டியுள்ள தொட்டியபட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வெங்காயம் தக்காளி பழ வகைகள் விவசாயம் செய்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் விலங்குகள் காட்டுக்குள் வராமல் இருக்க வேலி அமைத்துள்ளார்.

அதில் மின்சாரமும் பொருத்தியுள்ளார். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர் முயல் வேட்டையாடுவதற்காக விவசாய நிலத்துக்குள் சென்றுள்ளார். அப்போது அவர் விவசாய நிலத்தில் கிடந்த வேலியை மீத்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மறுநாள் காலை அப்பகுதியாகச் சென்ற பொதுமக்கள் முருகன் உயிரிழந்து கிடப்பதை பார்த்து போலீஸாருக்குத் தகவல் அளித்தார். அதன் படி போலீசார் விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man died for electric shock attack in viruthunagar