கிருஷ்ணகிரியில் சோகம் - தனியார் பள்ளி பேருந்து மோதி வாலிபர் பலி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பீர்பள்ளி சாமல் பள்ளம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதேபோல், மல்லசந்திரத்தைச் சேர்ந்த முருகன் மகன் சதீஷ் என்பவர் கூலி வேலைக்காக சாமல் பள்ளத்தை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். 

அப்போது தனியார் பள்ளி பேருந்து மல்லசந்திர பகுதிக்கு வந்தபோது திடீரென்று சதீஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையறிந்த சதீஷின் தாய், தந்தை மற்றும் உறவினர் உள்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி பேருந்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சதீஷின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man died for private school bus accident in krishnagiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->