சேரி வாக்கு இல்லாமல்.. சென் ஜார்ஜ் கோட்டை கிடைக்குமா...! ஆர்ம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணியில் பரபரப்பு!
march for justice Armstrong DMK vs Pa Ranjith
கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 8 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை 12 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பகுதி சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி, இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பாக நினைவேந்தல் பேரணி இன்று சென்னையில் நடந்தது.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் "என்ன கொடுமை. எத்தனை கொடுமை.. இதுவா திராவிட ஆட்சிக்குப் பெருமை, திராவிட மாடல் இதுதானா, மௌனம் காப்பது சரிதானா" என்று கோஷமிட்டனர். மேலும்,
பச்சை துரோகம், பச்சை துரோகம்.. பௌத்த குடிக்கு பச்சை துரோகம், ஆதி குடித்து பச்சை துரோகம், பூர்வ குடிக்கு பச்சை துரோகம்,
சேரி வாக்கு இல்லாமல்.. சேரி வாக்கு இல்லாமல்.. சென் ஜார்ஜ் கோட்டை கிடைக்குமா...
சேரி ஓட்டை வாங்காமல், பாராளுமன்றம் கிடைக்குமா...
சேரி வாக்கு இனிக்குதா... எங்கள் சேரி வாக்கு இனிக்குதா... நீதி கேட்டால் கசக்குதா... நீதி கேட்டால் கசக்குதா என்று கோஷமிட்டு வந்தனர்.
முன்னதாக, விசிக தலைவர் திருமாளவன், மறைமுகமாக பா ரஞ்சத்தின் இந்த பேரணியில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்க கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது, திமுக ஆட்சியை இப்படி விமர்சித்து கோஷமிடுவார்கள் என்ற காரணத்திற்காக தானோ என்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பு விவாதம் நடந்து வருகிறது.
English Summary
march for justice Armstrong DMK vs Pa Ranjith