தாம்பரத்தில் பரபரப்பு.. MBA மாணவன் ஓட ஓட வெட்டிக்கொலை.!! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் அருகே மின்வருவதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டி வந்த உதயகுமார் என்பவர் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

உதயகுமார் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்து தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேர் உதயகுமாரை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு கல்லூரி மாணவர்கள் ஏற்பட மூன்று பேரும் சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 

ஆறு மாதங்களுக்கு முன்பு உதயகுமார் ஆட்டோவை சாலையில் நிறுத்தி தகராறு ஈடுபட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக சரணடைந்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக சேலையூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் தாம்பரம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBA student murder in Tambaram


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->