புதுக்கோட்டை அருகே பரபரப்பு.! இறைச்சி கடை உரிமையாளர் வெட்டிக்கொலை.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் இறைச்சி கடை உரிமையாளரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் நகர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (40). இவர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தார். இனி நிலையில் நேற்று மாலை கலையரசன் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.

அப்பொழுது அவரை பின்தொடர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கலையரசனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கலையரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புதுக்கோட்டை போலீசார், கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கலையரசனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meat shop owner murder in Pudukkottai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->