மேட்டூர் அணை நிலவரம் : நீர் வரத்து 53, 098 கன அடி - நீர் மட்டம் 61. 31 அடி..!! - Seithipunal
Seithipunal



கர்நாடகாவில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால், காவிரியில் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப் பட்டுள்ளது. இதனால்  கடந்த சில நாட்களாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி 40 ஆயிரத்து 18 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 53 ஆயிரத்து 98 கன அடியாக அதிகரித்துள்ளது. 

இதையடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அணையில் இருந்து காவிரிக் கரையோர மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 55.12 அடியாக இருந்தது .

இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 61.31 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 21. 18 டி. எம். சி. யாக நேற்று இருந்த நிலையில், இன்று காலை 25.67 டி. எம். சி. யாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது. 

கடந்த 4 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 17. 48 அடியாகவும், நீர் இருப்பு 11.53 டி. எம். சி யாகவும் உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் அணையின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur Dam Water Level Updates


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->