துணை முதல்வர் பொறுப்பு யாருக்கு வழங்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் - அமைச்சர் முத்துச்சாமி.! - Seithipunal
Seithipunal


“கட்சியில் யாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்” என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

இந்த விழாவில், அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
”எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக உடனடி அனுமதி கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக  புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 

சதுர அடிக்கு இரு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிமுகவினர் கூறுவது தவறு. எதிர்வரும் தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும். இருப்பினும் அவர் தற்போது சிறையில் உள்ளது வருத்தமளிக்கிறது. 

திமுகவில் மூத்த அமைச்சருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியில் யாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்” என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister muththusami speech in coimbatore


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->