பொங்கலுக்கு 1000 வழங்காதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை - அமைச்சர் பெரியகருப்பன்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக, ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது; "பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன் 99 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

இருப்பினும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள மகளிர் உரிமைத்தொகையானது 1.15 லட்சம் கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 சென்றுகொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister periya karuppan speech about pongal gift 1000


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->