நாமக்கல் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம்! பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சடலத்தை கைப்பற்றிய நல்லிப்பாளையம் போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

இதற்கு இடையே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்த ஆண் சடலம், சேலத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனது அக்கா சாந்தி வீட்டில் தங்கி லாரி பட்டறையில் விஸ்வநாதன் வெல்டிங் வேலை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விசுவநாதன் தானாக தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அவரை யாராவது கொலை செய்து எரித்துச் சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பான பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

namakkal mystery death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->