போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு NCB சம்மன்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். 

அவர்களைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியான திமுக அயலக அணியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்கு நெருங்கிய நண்பரான இயக்குனர் அமீருக்கு தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் டெல்லியில் உள்ள மத்திய போதை போல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NCB sent summon to director Ameer in drug case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->