செங்கல்பட்டு : காய்கறி கடையில் கவர் கேட்டு கடை ஊழியரைத் தாக்கிய வாலிபர்கள் - போலீசார் விசாரணை.!
near chengalpattu youths attack vegetable shop employee
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை எதிரே ஒரு காய்கறி கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு நேற்று மாலை இரண்டு இளைஞர்கள் காய்கறி வாங்குவதற்காக வந்துள்ளனர்.
அங்கு அவர்கள் மூன்று கிலோ வெங்காயம் வாங்கி அதனை கவரில் போட்டு கொடுக்கும் படி கடை ஊழியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பிளாஸ்டிக் கவர் நகராட்சி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் அதை எங்களால் தர முடியாது.
உங்களுக்கு வேண்டுமானால் 5 ரூபாய் கொடுத்து துணிப்பையை வாங்கி கொள்ளுங்கள் என்றுத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடை ஊழியரை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த கடை ஊழியர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் கடை ஊழியரை தாக்கிய இளைஞர்களை அங்குள்ள கண்காணிப்பு கேமராவின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
English Summary
near chengalpattu youths attack vegetable shop employee