திருநெல்வேலி : முன் விரோதத்தால் வாலிபர் வெட்டிக் கொலை - மூன்று பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி அருகே ஆட்டுதட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் - முத்துலெட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், தற்போது முத்துலெட்சுமி மீண்டு கர்ப்பமாக உள்ளார். 

இதற்கிடையே முருகன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வெள்ளமடத்தில் தங்கியிருந்து கையுறை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதனால் முத்துலெட்சுமி தனது சொந்த ஊரில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். 

இந்த நிலையில் இன்றைய தினம் புத்தாண்டு என்பதால் அதனைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த முருகன் நேற்றிரவு கடையில் கேக் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். 

இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் முருகனின் உறவினர் ஒருவருடைய மகன், தனது தந்தை அழைப்பதாக கூறி முருகனை அழைத்து சென்றுள்ளார். 

அதன் பின்னர் சிலமணி நேரமாகியும் முருகன் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு மணிராஜ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, முருகன் அங்குள்ள ஆடு கட்டும் தொழுவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த முத்துலட்சுமி கதறி அழுதார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், முருகன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன் விவரம் பின்வருமாறு: "நாகர்கோவிலில் இருந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த ஊருக்கு வரும் முருகன், தனது உறவினரான மணிராஜ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும், அங்கு அவருடைய மகளிடம் பேசி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அங்குள்ள சிலர் தவறாக பேசியதால், மணிராஜ் முருகனை இனி வீட்டுக்கு வரவேண்டாம் என்று கண்டித்துள்ளார். 

இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால், ஆத்திரத்தில் இருந்த மணிராஜ் மற்றும் அவர் மகன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முருகனை கொலை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். 

அதன்படி நேற்று இரவு முருகனை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. 

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக போலீசார் மணிராஜ், அவர் மகன் ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினரை வலைவீசி தேடி வந்த நிலையில் இன்று காலை மூன்றுபேரையும் போலீசார் கைது செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tirunelveli three peoples arrested for young man died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->